கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை-வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-09-16 12:34 GMT

வெப்பசலனம் மற்றும் கிழக்கு - மேற்கு காற்று சந்திப்பு காரணமாக இன்று கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், மயிலாடுதுறை, அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல்,செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யும்.பிற மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் இந்த மழை கடலூர் மக்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

Tags:    

Similar News