மோடி நீண்ட ஆயுள் பெற வேண்டி கடலூரில் பா.ஜ.க.வினர் சிறப்பு யாகம்

மோடி நீண்ட ஆயுள் பெற வேண்டி கடலூரில் பா.ஜ.க.வினர் சிறப்பு யாகம் நடத்தினர்.

Update: 2022-01-11 09:55 GMT

திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் மோடி நீண்ட ஆயுடன் வாழ வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை பரவத் தொடங்கி உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. ஓமைக்ரான் பரவல் காரணமாக மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கடலூரில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரிக்கும் நிலையில் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீ பாடலீஸ்வரர் திருக்கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியினர் கடலூர் கிழக்கு மாவட்ட மீனவர் அணி மற்றும் மகளிர் அணி இணைந்து  சிறப்பு யாகத்தை நடத்தினர்.

பாரதப்பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும், நிரந்தர பிரதமராக நம் இந்திய நாட்டை அலங்கரிக்கவும் ஆயுஷ்மான் ஹோமமும் சுவாமிக்கு தங்கக்கவசம் அணிந்து சிறப்பு ஆராதனை பாஜக கடலூர் கிழக்கு மாவட்ட மீனவர் அணி மற்றும் மகளிர் அணி சார்பில் கடலூரில் புகழ்பெற்ற பாடலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. பல்வேறு பிரிவு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வேண்டுதல் நி

Tags:    

Similar News