பண்ருட்டி அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்த தாய் உள்பட 4 பேர் கைது

பண்ருட்டி அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2022-03-18 06:01 GMT

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் விசூரைச் சேர்ந்தவர் சிலம்பரசன் மனைவி அகல்யா (21). இவரது தங்கையான 15 வயது சிறுமியை கடலூர் முதுநகர் சிப்பாய் தெருவைச் சேர்ந்த குணேசகரன் மகன் கருணைஜோதி (28) என்பவருக்கு புதன்கிழமையன்று கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். சிறுமியை அவரது தாய்-தந்தை ஆகியோர் உதவியுடன் மேல்மலையனூருக்கு கடத்திச் சென்று அங்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இருவரும் மாற்று சமூகத்தினராக உள்ள நிலையில் இத்தகவல் வெளியூரில் உள்ள அகல்யாவிற்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, அவர் தனது பெற்றோரிடம் கேட்டபோது திருமணம் செய்து கொண்ட கருணைஜோதி மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து அகல்யாவை மிரட்டி அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து அவர் கடலூர் துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணைஜோதி, அவரது தந்தை மா.குணேசகரன் (62),மற்றும் சிறுமியின் தாய்-தந்தை ஆகியோரை கைது செய்தனர். சிறுமியை மீட்டு கடலூரிலுள்ள காப்பகத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News