எடப்பாடி பழனிசாமி கூறுவது பொய்- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பேட்டி

நெல் கொள்முதல் பற்றி எடப்பாடி பழனிசாமி கூறியது பொய் என வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறி உள்ளார்.

Update: 2021-09-21 14:50 GMT

அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்

தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த அ.தி.மு..க ஆட்சியை விட இந்த ஆண்டு தி.மு.க. ஆட்சியில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. உதாரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 68 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு 114 அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளது.

மேலும் நெல் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி அதன் காரணமாக விவசாயிகள் இடைத்தரகர்கள், தனியார்கள் விற்பனை செய்யாமல் அரசு கொள்முதல் நிலையங்களில் நாடி வருகின்றனர். இதனால் கடந்த ஆண்டு அ.தி.மு.க .ஆட்சியில் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து இருந்த நிலையில் இதுவரையில் தற்போது குறுவை சாகுபடியில் 64 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மணிகள் மழையில் நனைந்து சேதம் அடையக் கூடாது என்பதற்காக உணவுத்துறை அமைச்சருடன் இணைந்து 20 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தி துரித நடவடிக்கை மேற்கொண்டு அவற்றை அரிசி ஆலைகளுக்கு அனுப்பி அரைத்து அரிசியாக்கி சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி அறிக்கைகள் விடும் முன் உண்மை தன்மை அறிந்து அதற்கேற்றவாறு அறிக்கை தரவேண்டும். அவர் கூறுவதெல்லாம் வடிகட்டிய பொய்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News