நாளை மெகா தடுப்பூசி முகாம்- கடலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

கடலூர் மாவட்டத்தில் நாளை அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Update: 2021-09-11 14:24 GMT

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம்

கடலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்  நாளை நடைபெற உள்ளது. இது தொடர்பான  முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. 

கூட்டத்திற்கு தலைமை தாங்கி கலெக்டர் பேசியதாவது-

கடலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மாபெரும் தடுப்பூசி முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை ௭ மணி முதல் மாலை ௭ மணி வரை அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் கிராம ஊராட்சி அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள், அரசு கல்லூரி மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனா தொற்றிலிருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News