கேஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் அதிகாரம் போராட்டம்

கேஸ் விலை உயர்வை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2021-08-31 10:23 GMT

கேஸ் விலை உயர்வை கண்டித்து மக்கள் அதிகாரம் நடத்திய நூதன போராட்டம்

கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே மக்கள் அதிகாரம் சார்பில் கேஸ் விலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணை போகாதே என முழக்கமிட்டு கேஸ் சிலிண்டரில் மாலை போட்டு, மலர்களை தூவி நமமிட்டு நூதன முறையில் மக்கள் அதிகாரத்தின் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய  அரசை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுநல அமைப்புகளை சார்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News