கடலூர் மாவட்டத்தில் தேவையில்லாமல் சுற்றிய 3005 பேர் மீது வழக்குப்பதிவு.
கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கின் போது வெளியே சுற்றிய 3005 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கின் போது தேவைகளின்றி வாகனங்களில் சுற்றியவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த 20. 4. 2021 தேதி முதல் 31.5.2021 தேதி வரை, ஊரடங்குபோது தடை உத்தரவை மீறியதாக 3005 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2090 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 1967 இருசக்கர வாகனங்களும், 17 மூன்றுசக்கர வாகனம் மற்றும் 106 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டது.