தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

Update: 2021-11-28 14:30 GMT

தமிழகத்தில் பருவமழை மற்றும் காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்   நாளை காலை 8.30 மணி வரை தூத்துக்குடி, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, கடலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்காலுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால் கனமழை  காரணமாக நாளை (29.11.2021) கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என  மாவட்ட ஆட்சியர் பாலசுப்பரமணியம் அவர்கள் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News