கடலூரில் வீட்டு பூந்தொட்டியில் கஞ்சா செடி வளர்த்த இருவர் கைது

கடலூரில் வீட்டு பூந்தொட்டியில் கஞ்சா செடி வளர்த்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-30 17:15 GMT

கடலூரில் வீட்டில் கஞ்சா  செடி வளர்த்த ௨ பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, மது கடத்தல், போதைப் பொருட்கள், உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் கடலூர் நகர பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கடலூர் பாதிரிக்குப்பம் ஸ்ரீரங்கத்து அம்மன் கோவில் தெருவில் வீட்டில் கஞ்சா வளர்ப்பதாக காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையில் போலீசார் வீடு வீடாக சோதனை மேற்கொண்டனர்.

இதில் அடுத்தடுத்த வீடுகளில் பூந்தொட்டியில் கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து விக்னேஸ்வரன், ராமச்சந்திரன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஜானகிராமன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News