மழை நிவாரணம்: மத்திய அரசை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் போராட்டம்
நிவாரணப் பணிகளுக்கு தமிழக அரசு கேட்கும் தொகையை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி, கடலூரில் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு, உரிய இழப்பீடு வழங்க்கோரி, தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிவாரண பணிகளுக்கு தமிழ்நாடு அரசு கூறும் நிதியை மத்திய அரசு குறைக்கக்கூடாது. அறுவடைக்கு தயாரான இறந்த பயிர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் மூழ்கி அழிந்து போன குறுவை நெல் பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும். தோட்டப்பயிர்கள் பாதிப்புகளுக்கு உரிய அளவு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.இதில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.