கடலூரில் ஏற்றுமதியாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்.
கடலூர் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் ஏற்றுமதியாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் ஏற்றுமதியாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் கடலூரில் பிரபல தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. அங்கு அமைக்கப்பட்டிருந்த ஏற்றுமதிக்கு உகந்த பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டு ஏற்றுமதியாளர்கள் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் பாலகப்பிரமணியம் துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் 2020-21- நிதியாண்டில் தமிழகத்தியிருந்து ஒட்டுமொத்த ஏற்றுமதி 25.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளதாகவும், கடலுார் மாவட்டத்தில் செப்டம்பர் -2020-மார்ச் 2021 காலகட்டத்தில் ரூ.529.05 கோடி ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், நமது பொருட்களை உலகம் முழுவதும் கொண்டு சென்று உலக நாடுகளை தமிழகம் நோக்கி வரவைப்போம் என முதல்வர் கூறியதன்படி, கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களான தொழில்துறை இரசாயனங்கள். வேளாண் சார்ந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், முந்திரி பகுப்பு, மதிப்புக் கூட்டப்பட்ட பயாப் பொருட்கள், மண்பாண்டங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள்/பொம்மைகள் போன்றவற்றின் மூலம் மாவட்டத்தை ஏற்றுமதி மையமாக உருவாக்கும் முயற்சியை விரைந்து எடுக்க வேண்டும் என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வெங்கடேசன், மாவட்ட வளர்ச்சி மேலாளர்(நபார்டு வங்கி) குறு சிறு நிறுவனங்களின் அமைப்பு தலைவர் அசோக், சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஜி ஆர் கே துரைராஜ் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.