தேர்தல் பாதுகாப்பு- போலீசார்அணிவகுப்பு

Update: 2021-03-30 08:30 GMT

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புக்காக சாலையில் போலீசார் அணிவகுப்பு நடத்தினார்கள்.

கடலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் கடலூர் டிஎஸ்பி., சாந்தி, தலைமையில் போலீசாரின் அணிவகுப்பு நடைபெற்றது. மத்திய துணை ராணுவப் படை, போலீசார் என 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அணிவகுப்பு மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பு கடலூர் மார்கெட் கமிட்டியிலிருந்து புறப்பட்டு கடலூர் முதுநகர் காவல் நிலையம், மார்க்கெட், சுத்துகுளம் வரை சென்றடைந்தது.

Tags:    

Similar News