கடலூர் மாவட்டத்தில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கடலூர் பாதிரிகுப்பத்தில் விஷ்ணு சமாஜ் சார்பில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. ஹோலி யை முன்னிட்டு விஷ்ணு சமாஜ் உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலர் பவுடர் களை தங்கள் மீது ஒருவருக்கு ஒருவர் பூசிக்கொண்டு வாத்தியம் மேளம் முழங்க இசை நிகழ்ச்சிகள் நடத்தி நடனமாடினார்கள். இந்த நடனத்தில் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் கலர் சாயம் பூசி நடனமாடி பாட்டு பாடி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு பிறகு அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.