கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சக்தி கணேசன் பதவியேற்பு!
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சக்தி கணேசன் பதவி ஏற்றுக்கொண்டார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம், கலெக்டர்கள் பதவி உயர்வு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ச. சக்தி கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.