கடலூரில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா: அதிமுகவினர் கொண்டாட்டம்
கடலூரில் அண்ணா பிறந்தநாள் விழாவில் அண்ணா சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சரும், கடலூர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான எம் சி சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல்.குமார், நகர கழக துணைச் செயலாளர் கந்தன், மற்றும் கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.