கடலூரில் கல்லூரி மாணவர்கள் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி
கடலூரில் கல்லூரி மாணவர்கள் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்
கடலூர் மாவட்டத்தில் நாளை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்று கல்லூரி மாணவர்கள் பேரணி நடத்தினர்.
கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி முதல்வர் பழனிவேல் தலைமையில் பேரணியாக புறப்பட்டனர். ஊர்வலமாக சென்ற இவர்கள் தேவனாம் பட்டணத்தில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசியின் அவசியம் பற்றி எடுத்துக்கூறினார்கள். இதில் நாட்டு நலப்பபணித்திட்ட மாணவர்கள் இதில் அதிக அளவில் கலந்து கொண்டனர்.