கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா
கடலூர் ஆட்சியர் பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வீட்டில் தனிமைப் படுத்திக்கொண்டார்
கடலூர் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் பாலசுப்பிரமணியம். இவருக்கு சளி காய்ச்சலுடன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வீட்டில் தனிமை படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.