முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்திற்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத்துக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
தமிழக முன்னாள் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர்.எம்.சி.சம்பத்துடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.