தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், அந்தமான் கடல் பகுதியில் புதிதாக உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினாலும் தமிழகத்தில் இன்றும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் இன்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை, அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக கடலூர் மாவட்டத்தில் நவம்பர் 30ம் தேதியான இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.