கடலூர் அருகே கார் மரத்தில் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

சிகிச்சைக்காக சென்ற தம்பதி உட்பட மூன்று பேர் விபத்தில் உயிர் இழந்த சம்பவத்தால் சோகம்.

Update: 2021-12-20 02:57 GMT

கடலூர் சிப்காட் பகுதியில் சாலையோரம் இருந்த பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளான கார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியை சேர்ந்த வயதான தம்பதிகளான ராமு(65) மற்றும் லலிதா(58) உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களை சென்னையில் சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் இருக்கும் அவரது மருமகன் ரமேஷ் தனது ஓட்டுநரிடம் காரை கொடுத்து அவர்கள் இருவரையும் சென்னைக்கு அழைத்து வர அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட லலிதா மற்றும் ராமுவை ஓட்டுனர் கோதண்டம் இன்று அதிகாலை சென்னைக்கு அழைத்துச் சென்றபோது காலை கடலூர் சிப்காட் பகுதியை கடக்கும் பொழுது தூங்கியபடி ஓட்டுநர் காரை சாலையோரம் இருந்த பனை மரத்தில் மோதிவிட்டார்.

இந்த விபத்தில் வயதான தம்பதி ராமு லலிதா மற்றும் கோதண்டம் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். 3 பேரின் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கடலூர் துறைமுகம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News