கடலூரில் கல்வி கலாச்சார குழு சார்பில் விழிப்புணர்வு

கடலூரில் கல்வி கலாச்சார குழு சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை முதன்மை கல்வி அலுவலர் துவக்கி வைத்தார்.

Update: 2022-03-13 04:53 GMT

கல்வி கலாச்சார குழுவின் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

பள்ளி மேலாண்மைக்குழு வினை மறுசீரமைப்பு செய்யவும், அதன் செயல்பாடுகளை மேம்படுத்தவும் கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி  சார்பாக மாவட்ட அளவிலான கலைக்குழு கலைஞர்களுக்கான விழிப்புணர்வு வீதி நாடகங்களுக்கானபயிற்சி தரப்பட்டது.

இதில் 14 ஒன்றியத்துக்கான கலைக்குழுக்கள் கடலூர் முதன்மைக் கல்வி  அலுவலகத்தில் இருந்து புறப்பட்டது. இதனை முதன்மை கல்வி அலுவலர் பூபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். திட்ட அலுவலர் சுந்தரேசன் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் பாலகுருநாதன், செயலர் தாமோதரன் ஏற்பாடுகளை செய்தனர். மாவட்ட கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் குணாளன் உடனிருந்தார். தொடர்ந்து 10 நாட்கள் இந்த நிகழ்ச்சி கடலூர் மாவட்டம் முழுவதும் நடைபெறும்.

Tags:    

Similar News