விருதாச்சலம் அரசு பள்ளி ஆசிரியைக்கு கத்தி குத்து

விருதாச்சலம் அரசு பள்ளி ஆசிரியை கத்தியால் தாக்கப்பட்டார்; அவர் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Update: 2022-03-27 00:30 GMT
விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆங்கில ஆசிரியராக பணி புரிபவர் ரேகா. இவர், பள்ளி இடைவேளை நேரத்தில், வீட்டிற்கு உணவு உட்கொள்ளச் சென்றார். பின்னர் பள்ளிக்கு திரும்பியபோது, ரேகாவை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்த முயன்றார்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அதிர்ஷ்டவசமாக தலையில் சிராய்ப்பு உடன் ஆசிரியர் உயிர் தப்பினார். கத்தியால் தாக்க முயன்றவர் பள்ளி மாணவரா என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News