கடலூரில் கூட்டுறவு இணைப்பதிவாளர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறைசோதனை

கடலூரில், கூட்டுறவு இணை இயக்குனர் மற்றும் மேலாண் இயக்குனர் ரேணுகாம்பாள் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

Update: 2021-12-29 17:52 GMT

ரேணுகாம்பாள்

வேலூர் மாவட்டம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வளாகத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு இணை இயக்குனர் மற்றும் மேலாண் இயக்குனர் ரேணுகாம்பாள் அலுவலகத்தில்,  நேற்று வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

புத்தாண்டு பண்டிகையை ஒட்டி பில் தொகை வழங்க,  இணை இயக்குனர் பணம் பெறுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில்,  லஞ்ச ஒழிப்பு போலீசார், இந்த திடீர் சோதனையில்  ஈடுபட்டனர்.  அப்போது அவரது அலுவலகத்தில் கணக்கில் வராத 2 லட்சத்து 40 ஆயிரம் பணத்தையும், உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் செம்மண்டலம் அருகே உள்ள அவரது இல்லத்தில்,  லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் மாலா தலைமையில் 6 பேர் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனை மதியம் 2 மணிக்கு தொடங்கி, இரவு வரை  நீடித்தது. 

Tags:    

Similar News