புகைப்பட விவகாரம்: அ.ம.மு.க.செயலாளர் கடலூர் மாவட்ட எஸ்.பி.டம் மனு

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் புகைப்பட விவகாரம் தொடர்பாக அ.ம.மு.க.செயலாளர் கடலூர் மாவட்ட எஸ்.பி.டம் புகார் மனு அளித்தார்.

Update: 2021-12-26 06:48 GMT

கடலூர் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் மனு அளிக்க வந்தார் அ.ம.மு.க. செயலாளர் சுந்தரமூர்த்தி.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளராக இருப்பவர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி. இவர் புகைப்படத்துடன் அ.தி.மு.க. வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம். சி. சம்பத் புகைப்படம் சேர்த்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயலாளர் சுந்தரமூர்த்தி முன்னாள் அமைச்சர் எம். சி. சம்பத்திற்கு சால்வையணிவித்து கட்சியில் இணைந்தது போன்ற ஒரு புகைப்படம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சி பிடிக்காமல் கடலூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சீரழிக்கும் நோக்கில் மர்மநபர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதாக கூறி அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.

மேலும் இவ்வாறு சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்த மனு அளித்தனர்.

Tags:    

Similar News