அதிமுக ஒப்பந்தங்கள் போர்க்கப்பல் போன்றது: முதல்வருக்கு முன்னாள் அமைச்சர் பதில்

அதிமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் விக்ரம் சாராபாய் கப்பல் போன்றது என முதல்வருக்கு முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் பதிலடி.

Update: 2022-03-31 02:00 GMT

முதல்வர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் சம்பத்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் 4 நாள் அரசு முறைப் பயணமாக துபாய், அபுதாபி நாடுகளுக்கு சென்று திரும்பிய நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் காகித கப்பல்களாகத்தான் உள்ளன என தெரிவித்தார்.

இந்நிலையில் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் தொழில்துறை அமைச்சர் எம் சி சம்பத் கூறுகையில் அதிமுக ஆட்சிகாலத்தில் கோரப்பட்ட ஒப்பந்தங்கள் விக்ரம் சாராபாய் கப்பல் போன்றது. அது காகிதகப்பல் அல்ல, முதலமைச்சர் எங்களை கொச்சைப்படுத்துவது நியாயம் அல்ல. நாங்கள் போடப்பட்ட ஒப்பந்தங்கள் தலைதூக்கி நிற்கிறது. கொரோனா காலத்திலும் 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளோம். மற்ற மாநிலங்களை காட்டிலும் உலக அளவில் முதலீடுகளை ஈர்க்க முதல் மாநிலம் தமிழகம் என பல்வேறு நாளிதழ்கள் பாராட்டியுள்ளன.

அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் தொடர்ச்சிதான் முதல்வர் கையெழுத்திட்டு செயல்படுத்துகிறார். அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் காகித கப்பல் என முதல்வர் கூறுவது விந்தையாகவும், வியப்பாகவும் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் தெரிவித்தார்.

Tags:    

Similar News