கடலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களில் 126 மதுவிலக்கு வழக்குகள் பதிவு
கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் இரண்டு நாட்களில் 126 மதுவிலக்கு வழக்குகள் பதிவு.
கடலூர் மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு குற்றம் சம்பந்தமாக அதிரடி சோதனை நடத்தி கடந்த இரண்டு நாட்களில் 126 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 138 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 14 இரு சக்கர வாகனம், ஒரு நான்கு சக்கர வாகனம் உள்பட 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 277 லிட்டர் சாராயம், 146 மதுபாட்டில்கள் மற்றும் கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,