மக்கள் நீதி மய்யம் கூட்டணி வேட்பாளர் மனு தாக்கல்

Update: 2021-03-19 09:30 GMT

கடலூரில் சமத்துவ மக்கள் நீதி கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல்அறிக்கை, கூட்டணி பேச்சு,வேட்பாளர் அறிவிப்பு ஆகியவற்றை முடித்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மக்கள் நீதி மய்யம், ஐஜேகே கூட்டணி சார்பில் சமத்துவ மக்கள் நீதிக்கட்சியின் வேட்பாளர் ஆனந்தராஜ், கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ஜெகதீஸ்வரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் மக்கள் நீதி மையம் மற்றும் ஐஜேகே கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News