காவல்துறை சார்பில் ஹெல்மெட் பேரணி

Update: 2021-01-18 11:15 GMT

கடலூரில் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழாவை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

கடலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழாவை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பேரணியில் மாவட்ட எஸ்பி., அபிநவ், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் கடலூர் நகரின் முக்கிய வீதிகளில் இருசக்கர வாகனத்தை ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பேரணியை கடலூர் துணை காவல் கண்காணிப்பாளார் சாந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.இப்பேரணியில் கடலூர் மாவட்ட காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News