கோவை விமான\நிலையத்தில் எதிர்பாராமல் சந்தித்த அண்ணாமலையும் கார்த்திக் சிதம்பரமும்

இந்துத்துவா கொள்கை தற்போது வேரூன்றி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்துத்துவா கொள்கைக்கு எதிரான நிலைப்பாடு எடுபடவில்லை

Update: 2022-09-02 00:30 GMT

கோவை விமான நிலையத்தில் சந்தித்துக்கொண்ட பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை மற்றும் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்திக்சிதம்பரம்

கோவை விமான நிலையத்தில் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் வந்ததால்  தொண்டர்கள் முழக்கமிட்டதால்  சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது  அவர் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் புனித பயணம், பொதுமக்களை நாடி செல்லும் பயணம் மாபெரும் வெற்றி பெறும் .அதுவே கட்சிக்கு பலம்.  பொதுமக்களை சந்திக்கவும் இது ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியை விட்டு சென்றது தொடர்பான கேள்விக்கு கட்சியை விட்டு யார் சென்றாலும் கட்சிக்கு பின்னடைவு தான். காங்கிரஸ் கட்சி விசித்திரமான முறையில் தமிழகத்தில் உள்ளதாகவும் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ளோம் ஆனால் அரசாங்கத்தில் பங்கு இல்லை.  மக்கள் பிரச்னைகளை முன்வைக்க முடியவில்லை. எதிர் கட்சியாகவும் செயல்பட முடியவில்லை.  

தமிழகத்தில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது சாதாரண மக்களிடையே வரிச்சுமையை அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டி,பண மதிப்பிழப்பு,லாக் டவுன் அறிவிக்கும் போது யாருக்கும் ஊக்கத்தொகை வழங்காதது போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டனர் .இன்றைய பிரதமரும் நிதியமைச்சரும் உள்ள வரை மக்கள் யாருக்கும் எதுவும் கிடைக்காது பாஜவிற்கு எதிரான கட்சிகள் மீது அமலாக்கத்துறை மற்றும் சி பி ஐ ஆகியவற்றை ஏவி விட்டு ஆட்களை இழுத்து வருகிறார்கள். தவறான வழியில் கட்சிகளை உடைக்கிறார்கள் .பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த உறுப்பினர்களே இருப்பதால் தங்களால் கேள்வி எழுப்ப முடிவதில்லை.

இந்துத்துவா கொள்கை வேரூன்றி இருப்பதாகவும் அதனால் இந்துத்துவாவை எதிர்த்து நாங்கள் வைக்கும் வாதம் இப்போதைக்கு எடுபடவில்லை.அதானி உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது பாஜக வின் சாதனை பட்டியலில் இடம்பெற வேண்டும். தமிழகத்தில் மக்கள் பிரச்னைகள் நிறைய உள்ளன. தமிழக காங்கிரஸ் கட்சி அடிக்கடி மக்களை சந்தித்து மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுக்க வேண்டும். ஆனால் கூட்டணியில் இருப்பதால் எங்களால் அது முடியவில்லை .ஒன்றரை ஆண்டில் முதலமைச்சர் சுறு சுறுப்புடனும் வெளிப்படை தன்மையுடனும் எளிதில் அணுக கூடியவராகவும் செயல்படுகிறார்.

முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் விமான நிலையத்திற்கு வந்தபோது  திரண்டிருந்த பாஜக தொண்டர்கள்   அண்ணாமலைக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர்.அதே வேளையில் காங்கிரஸ் கட்சியினரும் எதிர் முழக்கங்களை எழுப்பியதால் இரு தரப்பினரிடையே முழக்க மோதல் உருவானதால் சில நிமிடங்கள் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்துத்துவா கொள்கை தற்போது வேரூன்றி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்துத்துவா கொள்கைக்கு எதிரான கருத்துகள் தற்போதைக்கு எடுபடவில்லை என காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..


Tags:    

Similar News