மகள் வீட்டை விட்டு சென்றதால் மனமுடைந்த தாய் விஷம் தின்று தற்கொலை
கோக்குடி கிராமத்தில் மகள் வீட்டை விட்டு சென்றதால் மனமுடைந்த தாய் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் மாவட்டம் அந்தோணிசாமியின் மனைவி ஜெயசீலி. இவரது கணவர் உயிரிழந்த நிலையில், கூலி வேலை செய்து கொண்டு, தனது மகன் மற்றும் மகளை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவரது மகள் பக்கத்து ஊரை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். மேலும் யாரிடமும் கூறாமல் வீட்டை வெளியேறியாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ஜெயசீலி, வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர், ஜெயசீலியை மீட்டு, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில், இன்று வழக்குபதிவு செய்த கீழப்பழூவூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.