பதுக்கி வைத்து மது பாட்டில் விற்பனை: பெண் கைது

வீட்டை சோதனை செய்த காவல்துறையினர் மறைத்து வைத்திருந்த 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-09-08 05:22 GMT

பைல் படம்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் வைத்து மதுபாட்டில் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் கீழநத்தம் மெயின் ரோட்டில் வசிக்கும் பரிமளா என்பவர் வீட்டில் மதுபாட்டில்களை விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர்.

பரிமளா வீட்டை சோதனை செய்த போது, பின்புற பகுதியில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த, 50 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து விக்கரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பரிமளாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News