திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நடந்த உண்டியல் உடைப்பு சம்பவங்கள் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Update: 2022-06-13 12:33 GMT

திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

அரியலூர் மாவட்டம் திருமழபாடி உள்ள வைத்தியநாத சுவாமி கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. சுற்றுலாத்தலமாக உள்ள இந்த கோவிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சிவனை வழிபட்டு செல்கின்றனர். இவர்கள் தங்களது காணிக்கைகளை கோவிலில் உள்ள உண்டியலில் செலுத்துவது வழக்கம். கடந்த ஆறாம் தேதி இக்கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது.

இதையடுத்து இன்று காலையும் கோவிலுக்கு வந்த அதிகாரிகள் கோவிலின் 4 உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட நிகழ்ச்சி கண்டு சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருட்டு குறித்து கோயில் நிர்வாக அலுவலர் மணிவேல் திருமானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருமானூர் போலீசார் கோவிலிலுள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நடந்த உண்டியல் உடைப்பு சம்பவங்கள் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News