தைபூசத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

அரியலூர் மாவட்டத்தில், தைப்பூசத்தையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

Update: 2022-01-18 12:00 GMT

தைப்பூசத்தை முன்னிட்டு, முருகன் கோவிலில் வழிபாடு நடத்திய பக்தர்கள். 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில், தைப்பூச விழா விமர்சையாக நடைபெற்றது. அவ்வகையில், சுப்பிரமணியர் கோயில், கல்லங்குறிச்சி சாலையில் உள்ள குறைதீர்க்கும் குமரன் கோயில் மற்றும் அஸ்தினாபுரம் முருகன் கோயில்களில் தைப்பூசத்தையொட்டி சுவாமிகளுக்கு பால், தயிர், தேன் உட்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்த பூஜையில், பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூசத்தையொட்டி  சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. கொரோனா கட்டுப்பாடுகளால், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Tags:    

Similar News