அரியலூர் நகர மதிமுக சார்பில் 150 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்
அரியலூரில், ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு, மதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
அரியலூர் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட இடத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரியலூர் நகர மதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் 150 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன், அரியலூர் நகர மதிமுக செயலாளர் ராம மனோகரன், மாவட்ட பிரதிநிதி சேகர், நகர பிரதிநிதி மகாலிங்கம், வழக்கறிஞர் ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.