செந்துறையில் ஒன்றிய தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

செந்துறை ஒன்றியத்தில் கோடைகால தண்ணீர் பந்தலை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.

Update: 2022-04-10 13:02 GMT

செந்துறையில் தண்ணீர் பந்தலை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்து நீர்மோர் வழங்கினார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை தெற்கு ஒன்றியத்தில் ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க  கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் பந்தலை தமிழக  போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி,வெள்ளரி, மோர் வழங்கினார். உடன் ஒன்றிய பொறுப்பாளர் பூ.செல்வராஜ் மற்றும் மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News