அரியலூர்: பேருந்துகளை மீண்டும் இயக்கக்கோரி சிபிஐஎம் சார்பில் மனு

கொரோனா பரவலின் போது நிறுத்தப்பட்ட கிராமப்புற பேருந்துகளை, மீண்டும் இயக்கக்கோரி போக்குவரத்துதுறை அமைச்சரிடம் சிபிஐஎம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-04-17 07:30 GMT

அமைச்சரிடம் மனு அளித்த சிபிஐஎம் கட்சியினர். 

ஜெயங்கொண்டம் வட்டம் உட்கோட்டை கிராமத்தில்,  கொரானா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்து சேவைகள் தனியார் பேருந்துகள் மீண்டும் இயங்கிய, அதே நேரங்களில் உட்கோட்டைக்கு பேருந்துகள் வந்து செல்ல வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் சிபிஐஎம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் சந்தித்து மனு கொடுத்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல், சிபிஐஎம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் மற்றும் மாவட்ட செயற்க்குழு உறுப்பினர்கள் கந்தசாமி, பரமசிவம், கிருஷ்ணன், துரை. அருணன் தாபழுர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், திருமானுர் புனிதன், மாவட்டக்குழு உறுப்பினர் அருணாச்சலம் ஆகியோர் சந்தித்து போக்குவரத்துதுறை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News