அரியலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரியலூர் அண்ணா சிலை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் அண்ணா சிலை அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க வேண்டும், மழைகாலங்களில் வேலையில்லாத மாதங்களை கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும், வாரிய பண பயன்களை உயர்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் சந்தானம் உட்பட பலரும் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.