அரியலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் நகை திருட்டு
வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பிரோவில் இருந்த 7 சவரன் நகை மற்றும் 18 ஆயிரம் ரொக்கம் திருட்டு
அரியலூர் ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் டால்மியாபுரத்தில் உள்ள தொழிலாளர் நல மையத்தின் பாலசேவியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் பணியின் காரணமாக வெளியூர் சென்ற நிலையில், இன்று காலை வீட்டிற்க்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பிரோவில் இருந்த 7 சவரன் நகை மற்றும் 18 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனார்.