அரியலூர்: தரிசு நிலத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்தால் பரிசு

அரியலூர் மாவட்டத்தில் தரிசு நிலங்களில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்து சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-02 05:15 GMT

கோப்பு படம் 

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் தரிசு நிலங்களில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்து, சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் தரிசு நிலங்களில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்து, அதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.10 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

தகுதியான விவசாயிகள் www.tnhorticulture.tn.gov.in என்னும் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் 07.04.2022-ஆம் தேதிக்குள் அளிக்குமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News