அரியலூர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 5 மணி வரை 78.06 % வாக்குப்பதிவு

அரியலூர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாலை 5 மணி வரை 78.06 சதவீத வாக்காளர்கள் வாக்களித்தனர்.

Update: 2021-10-09 13:14 GMT

பைல் படம்

அரியலூர் மாவட்டத்தில் 3 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 13 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆக மொத்தம் 16 பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் செந்துறை ஒன்றியம் – கீழமாளிகை, ஜெயங்கொண்டம் ஒன்றியம் - உட்கோட்டை, ஆண்டிமடம் ஒன்றியம் - அழகாபுரம் மற்றும் நாகம்பந்தல் ஆகிய 4 வார்டு உறுப்பினர் பதிவி இடங்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இன்று ஆண்டிமடம் ஒன்றியம் ஓலையூர், தா.பழூர் ஒன்றியம், மனகெதி மற்றும் நாயகனைப்பிரியாள் ஆகிய 3 ஊராட்சிகளுக்கு தலைவர் பதவி இடங்களுக்கும், ஆண்டிமடம் ஒன்றியம் ஓலையூர், தா.பழூர் ஒன்றியம், மனகெதி மற்றும் நாயகனைப்பிரியாள் ஊராட்சிகளுக்கு தலைவர் பதவி இடங்களுக்கும், அரியலூர் - ஓட்டக்கோவில் (வார்டு 6), திருமானூர் - வெற்றியூர் (வார்டு 6), கோவிலூர் (வார்டு 1), செந்துறை - தளவாய் (வார்டு 9), சிறுகடம்பூர் (வார்டு 3), ஜெயங்கொண்டம் - ஜெ.தத்தனூர் (வார்டு5), ஆண்டிமடம் - இடையக்குறிச்சி (வார்டு 2), இலையூர் (வார்டு 9), தா.பழூர் - அம்பாபூர் (வார்டு 8) ஆகிய 9 வார்டு உறுப்பினர் பதிவி இடங்கள் ஆக மொத்தம் ௧௨ பதவியிடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் நடைபெறுகிறது.

இன்று அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் ஆகிய ஒன்றியங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி ஆர்வத்தோடு, பொது மக்கள் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர்.

இன்று நடைபெறும் தேர்தலில் 5669 ஆண் வாக்காளர்களும், 5663 பெண் வாக்காளர்களும் சேர்த்து 16,332 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

5 மணி நிலவரப்படி 4279 ஆண் வாக்காளர்களும், 4567 பெண் வாக்காளர்களும் சேர்த்து 8846 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.

அரியலூர் ஒன்றியத்தில் 78.83 % வாக்குகளும், திருமானூர் ஒன்றியத்தில் 84.97 % வாக்குகளும், செந்துறை ஒன்றியத்தில் 65.51 % வாக்குகளும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 81.57 % வாக்குகளும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 76.35% வாக்குகளும், தா.பழூர் ஒன்றியத்தில் 79.86% வாக்குகளும் சேர்த்து, மாவட்டம் முழுவதும் சராசரியாக 78.06% வாக்குகள் பதிவாகியது.

வாக்காளர்கள் வரிசையில் நின்று, காத்திருத்து தங்களது வாக்குகளை அளித்து வருகின்றனர். வாக்குச்சாவடி மையங்களில் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News