Psoriasis Disease Homeo Treatment In Tamil சொரியாஸிஸ் நோயை ஹோமியோபதி சிகிச்சையில் குணப்படுத்த முடியுமா?.....படிங்க..
Psoriasis Disease Homeo Treatment In Tamil சொரியாஸிஸ் என்ற நோயை தமிழில் காளாஞ்சகப்படடை என்றும் கூறுகிறோம்.இந்த செதில்படை எனும் செதில் உதிரும் நோயில் சிவப்பான படை போன்று தோன்றி அதற்கு மேல் வெள்ளையாகவோ சாம்பல் நிறமாகவோ மீனின் செதில்கள் போன்று உதிர்ந்துகொண்டே இருக்கும்.
Psoriasis Disease Homeo Treatment In Tamil
மனிதர்களாக பிறந்தவர்களுக்கு நோய்கள் என்பது பல காரணிகளால் வருகிறது. நோயே இல்லாமல் வாழமுடியுமா? என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. பெரும்பாலான நோய்கள் நம் சுற்றுப்புற சுகாதாரமின்மை, சுற்றுச்சூழல் மாசுகள், மற்றும் நாம் உபயோகப்படுத்தும் நீர், உடல் உழைப்பு இல்லாதது, உடற்பயிற்சி இல்லாதது, உணவுக்கட்டுப்பாட்டின்மை போன்ற பெரும்காரணகளால்தான் வருகிறது.
இன்றைய மருத்துவ உலகில் பல பிரிவுகள் உள்ளது. அலோபதி, ஹோமியோபதி, இயற்கை மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம்,யுனானி என பல பிரிவுகள் இருந்தாலும் நாம் நம் மனதுக்கு ஏற்ற சிகிச்சையினை மேற்கொண்டால்தான் நோய்கள் தீ்ரும். அதுவும் நாம் நம்மையும் நமக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையே நோய் குணமாவதற்கான வழியாக சொல்லலாம்.
Psoriasis Disease Homeo Treatment In Tamil
அந்த வகையில் மனிதர்களுக்கு ஏற்படும் சொரியாஸிஸ் எனப்படும் செதில் நோயினை ஹோமியோபதி சிகிச்சையின் மூலம் முற்றிலும் குணப்படுத்திவிட முடியும் என சேலம் டாக்டர். முகுந்தன் தெரிவிக்கிறார்.அவர் இது பற்றி மேலும் தெரிவிக்கும்போது,
தோலில் பல வகையான நோய்கள் ஏற்படுகின்றன. இவை பிறப்பிலேயே உரு வான சில நோய்கள், பரம்பரையாக வரும் நோய்கள், சத்துகள் குறைவானதால் உருவாகும் நோய்கள், வைரஸ், காளான், போன்ற தொற்றுகளினால் வரும் நோய்கள், ஒவ்வாமையினால் ஏற்படும் நோய்கள் மற்றும் பால்வினை நோய்கள், போன்ற பல வகையான தோல் நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றில் மிகவும் தொல்லை தரும் தோல்நோய்கள் பற்றி காண்போம்.
செதில்படை நோய் (சொரியாஸிஸ்)
சொரியாஸிஸ் என்ற நோயை தமிழில் காளாஞ்சகப்படடை என்றும் கூறுகிறோம்.இந்த செதில்படை எனும் செதில் உதிரும் நோயில் சிவப்பான படை போன்று தோன்றி அதற்கு மேல் வெள்ளையாகவோ சாம்பல் நிறமாகவோ மீனின் செதில்கள் போன்று உதிர்ந்துகொண்டே இருக்கும்.இது பார்ப்பவர்களுக்கு ஒருவிதமான பயத்தையும் அருவறுப்பையும் கண்டிப்பாக ஏற்படுத்தும். இது முழங்கை, முழங்கால், கழுத்தின் பின்பகுதி, முதுகு, தலைப்பகுதி போன்ற இடங்களில் தோன்றலாம். இது தலைப்பகுதியில் அடை அடையாக உற்பத்தியாவதால் முடி உதிர்வதற்கும் மெலிவதற்கும் முக்கிய காரணமாக அமைகின்றது.
Psoriasis Disease Homeo Treatment In Tamil
இந்த செதில் படை நோய் எவ்வாறு ஏற்படுகின்றது என்று பார்ப்போம். நமது தோலில் வெளிப்புறம் உள்ள திசுக்கள் நமது கண்ணுக்கு தெரியாமலேயே அவ்வப்போது உதிர்ந்து தானாகவே புதுப்பித்துக்கொள்ளும் குணம் உடையது. இந்த மாற்றமானது இயல்பாக மாதத்திற்கு ஒரு முறை நடக்கும். ஆனால்இந்த செதில் நோய் உள்ளவர்களுக்கு மிகவும் வேகப்படுத்தப்பட்டு நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறை இந்த மாற்றம் நடைபெறுவதால் மீன் செதில் போன்று தோல் உதிர்ந்துகொண்டே இருக்கும்.இந்த நோயை குணப்படுத்த முடியாது. கட்டுக்குள்தான் வைத்திருக்க முடியும் என்ற தவறானநம்பிக்கை மக்கள் மனதில் உள்ளது. ஆனால் இதை ஹோமியோபதி மருத்துவத்தில் முற்றிலுமாக குணப்படுத்த முடியும். இது நாள்பட்ட நோய் என்ற காரணத்தினால் உங்கள் மருத்துவரோடு நீங்கள் முழுமையாக ஒத்துழைத்தால் இந்த நோயை அடியோடு ஒழிக்க முடியும்.
உதாரணமாக ஒரு பெண்ணிற்கு ஒன்றரை ஆண்டுகளாக இந்த நோய் இருந்துள்ளது. அதுவரை எல்லாவிதமான சிகிச்சைகளையும் பெற்று பலன் பெறாமல் நோய் உடல் முழுவதும் பரவிய நிலையில் என்னிடம் வந்தனர். அது வரை நிறைய வெளிப்பூச்சு மருந்துகளால் அமுக்கப்பட்ட நிலை எல்லா மருந்துகளையும் நிறுத்திய பிறகு உடல் முழுவதும் அதனுடைய வேகம் தெரிய ஆரம்பித்தது. அவரது உடல் மற்றும் மனநிலைகளை ஆராய்ந்து ஹோமியோபதி உள் மருந்துகளைக் கொடுத்த போது உள்ளே அமுங்கியிருந்த செதில்படை நோயின் தீவிரம் மிக வேகமாக வெளியேற ஆரம்பித்தது. சுமார் 2மாத காலம் இந்த வெளியேற்றத்தின் தாக்கம் இருந்தது. அதன்பிறகு இரண்டு மாதங்களுக்கு தோலின் நிலை படிப்படியாக மாறி பழைய மென்மையான, இயற்கையான தோலின் நிலையை அடைந்து முழுமையாக குணப்படுத்தப்பட்டார். ஆகவே ஹோமியோபதி உள் மருந்துகளால் மட்டுமே இந்த தொல்லை முழுமையாக குணப்படுத்த முடியும் என்று தெளிவாகிறது.
Psoriasis Disease Homeo Treatment In Tamil
வண்டுக்கடி (எக்ஸிமா)
எக்ஸிமா என்பது தமிழில் வண்டுக்கடி என்று கூறினாலும் வண்டு கடிப்பதற்கும், மற்ற கிருமிகளுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.இது இயல்பாக உடலில் தோன்றக்கூடிய ஒரு வியாதி. ஹோமியோபதி தத்துவத்தின் அடிப்படையில் இது சோரிக் மாயாஸம்மால் வருகிறது. மாயாஸம் என்பது தோலில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான வியாதிகளுக்கும் அடிப்படைக்காரணமான பக்குவமாகும். இது சில சமயம் டிரை எக்ஸிமா அதாவது தோல் வறண்டு தடிமனாக உள்ளதாகவோ, வீப்பிங்டைப் அதாவது கொப்புளங்கள், புண் ஆகியவைகள் ஏற்பட்டு எக்ஸிமாவில் தீவிரமாக அரிப்பு ஏற்பட்டு புண்ணாகக்கூடிய நிலைக்கு தள்ளப்படும். ,இதற்கு மேல் தொற்றுக்கிருமிகள் தாக்கி, கொதித்து, சீழ் பிடித்து நீர் வர ஆரம்பிக்கும். இதனைக் களிம்பு போன்ற வெளிப்பூச்சு மருந்துகளால் கட்டாயம் அமுக்கக்கூடாது. அப்படி அமுக்கப்படும் போது அது வேறு வித நோயாக குறிப்பாக நுரையீரல் தொந்தரவாகவோ அல்லது ஆஸ்துமா தொந்திரவாகவோ மாறுவதற்கு வாய்ப்புண்டு. ஆகவே முறையான ஹோமியோபதி உள் மருந்துகள் இந்த தோல் நோய் முழுமையாக வெளியேற்றப்பட்டால் தான் இந்தநோயாளி முற்றிலும் குணமடைவதோடு நோய் எதிர்ப்புச்சக்தியும் வளர்ந்து ஒரு ஆரோக்யமான மனிதனாக மாற முடியும். இதற்கு சல்பர், கிராபைடிஸ், பெட்ரோலியம் போன்ற மருந்துகளைப் பயன்படுத்தலாம்.
Psoriasis Disease Homeo Treatment In Tamil
வயதான ஒருவர் சுமார் 12 வருடங்களாக ஆஸ்துமா நோயால் மிகுந்த அவஸ்தைப்பட்டு பலவைத்தியங்கள் செய்து பலனளிக்காமல் இருந்தார். அவரது முழு விவரத்தையும் ஆராய்ந்த பிறகு கிராபைடிஸ் என்ற மருந்தினை கொடுத்த பத்து நாட்களுக்குப் பிறகு இரண்டு காலிலும் எக்ஸிமா என்ற நோய் வெளிப்பட்டு ஒரு மாத காலமாக தோலில் சீழ் போன்று வடிந்த பின்னர், தோல் படிப்படியாக குணமடைந்து அதே சமயத்தில் அவருக்கு ஆஸ்துமா தொல்லையும் நி்ன்று விட்டது. இன்று வரைஅ வருக்கு இரண்டு தொல்லைகளும் தலைகாட்டவே இல்லை. அவருக்கு சிறு வயது முதலே இருந்து வந்த எக்ஸிமாவை வெளிப்பூச்சு மருந்துகளால் தீவிரமாக அமுக்கியதன் விளைவாக ஆஸ்துமா நோய் ஏற்பட்டது. ஆகவே இந்த நோயாளிக்கு சரியான மருந்தை கொடுத்தபோது எதன் விளைவாக ஆஸ்துமா ஏற்பட்டதோ, அந்த தோல் நோயினை முழுமையாக வெளிக்கொணர்ந்தததால் இரண்டு நோய்களும் முற்றிலுமாக குணமடைந்தது.
நன்றி :டாக்டர். முகுந்தன் , சேலம்.