நீலகிரி மாவட்டத்தில் 139 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் உலகையே கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. இதில் தினசரி கொரோனாவினால் புதிதாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் நீலகிரி மாவட்டத்தில் இன்றைய நிலவரப்படி மொத்தம் 139 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காெரோனா பாதிப்பால் 42 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.