கோபம் - வருத்தம்; 'பிக்பாஸ்' வீட்டில் ஏடிகே 'எமோஷனல்'
adk emotional in bigg boss 6 tamil- சக போட்டியாளர்களிடம் திடீர், திடீரென கோபப்படும் ஏடிகே, பின் அதற்காக வருத்தப்பட்டு 'எமோஷனல்' ஆவது தொடர்கிறது.
adk emotional in bigg boss 6 tamil, bigg boss season tamil 6 - விஜய் டிவியில், 'பிக்பாஸ்' நிகழ்ச்சி, 70 வது நாட்களை தொட்டு விட்டது. இப்போது, நிகழ்ச்சி சொர்க்கம் - நரகம் என்ற 'டாஸ்க்' அடிப்படையில், பரபரப்பாக போய்க் கொண்டு இருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை, அங்கு போட்டியாளர்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளும், வாக்குவாதங்களும், சண்டைகளுமே, நிகழ்ச்சியை மேலும், மேலும் விறுவிறுப்பாக்குகிறது. அதிலும், முதன்முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்ட போது, ஆரவ் வின்னராக வெற்றி பெற்ற முதல் சீசனில், அதிகளவில் போட்டியாளர்களுக்கு 'டாஸ்க்' தரப்பட்டது. அதுவும், கடுமையான போட்டியாக இருந்தது.
ஆனால், அடுத்தடுத்த சீசன்களில் 'டாஸ்க்' குகள் வெகுவாக குறைந்து போனது. ஏனெனில், போட்டியாளர்களுக்குள் ஏற்படும் சண்டை, சச்சரவுகளால் நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும், பார்வையாளர்களால் அதிகமாகவும் ரசிக்கபட்டதால், அதுவே, பின்னர் தொடர்ந்தது.
தற்போது நடந்துவரும் பிக்பாஸ் ஆறாவது சீசனில் கூட, 'டாஸ்க்'குகள் என்பது மிக குறைவாகவே உள்ளது. ஆனால், போட்டியாளர்களுக்குள் நடக்கும் பிரச்னைகளும், வாக்குவாதங்களும் அதிகமாக உள்ளது. அதிலும் அசீம், தனலட்சுமி போன்ற போட்டியாளர்கள் நீடித்திருக்க காரணம், அவர்கள் அடிக்கடி ஏதாவது காரணத்தை மையப்படுத்தி, பிரச்னையை கிளப்பி விடுவதுதான். அதிலும் தனலட்சுமி தன்னைத்தானே 'பெரிய ஆளாக' கருதிக்கொண்டு, மற்றவர்களை எடுத்தெறிந்து பேசுவதும், கத்தி கூப்பாடு போடுவதும் பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது. அதே போல், அசீமும் தன்னை மட்டுமே பிரதானப்படுத்திக்கொண்டு, மற்றவர்களை காயப்படுத்தி விடுகிறார். அந்த வரிசையில், இப்போது ஜனனி, அமுதவாணன் இருவரும் ஜோடி சேர்ந்துகொண்டு, பிக்பாஸ் வீட்டுக்குள் அலப்பரை செய்து வருகின்றனர்.
இதுவரை அமைதி காத்த ஏடிகேவும் நேற்று, தன் பங்குக்கு சண்டை போட்டு விட்டார். சொர்க்கம் - நரகம் விளையாட்டில், அசீம் - ஏடிகே இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது கோபமாக பேசிய ஏடிகே, சில சைகைகளை செய்து, அசீமை இழிவுபடுத்தினார். 'அசிங்கமாக திட்டி விடுவேன்' என சொர்க்கவாசியான ஏடிகே, நரகவாசிகளை பார்த்து திட்டினார். அசீம், ஏடிகே ஆகியோரை விக்கிரமன் சமாதானப்படுத்தி பேசினார்.
இறுதியில், விக்கிரமனிடம் தனியாக அமர்ந்து பேசிய ஏடிகே, 'என்னை எல்லோருமே ஏமாற்றுகின்றனர். அதனால், சின்ன சின்ன விஷயங்களை கூட என்னால், தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் மகன் கூட இப்போது, என்னுடன் இல்லை,' என்று வருத்தப்பட்டு கண்ணீர் விடுகிறார். அவருக்கு, விக்கிரமன் ஆறுதல் கூறி, சமாதானப்படுத்துகிறார்.
இந்நிலையில், இந்தவாரம் 'எலிமினேஷன்' லிஸ்ட்டில், ஏடிகே இருக்கிறார். இந்த பிரச்னைகளால் ஏடிகே கவனிக்கப்பட்டவராக இருப்பதால், அவர் இந்த வாரமும் நிகழ்ச்சியில் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறார். அதனால், ஜனனி அல்லது ரக்சிதா இந்த வாரம் வீட்டை விட்டுச் செல்ல வாய்ப்பிருப்பதாக, சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.