/* */

தமிழக அரசின் பெயர்ப் பலகையை அகற்றிய சாஸ்த்ரா பல்கலைகழகத்தினர்

தமிழக அரசின் சிறைத் துறைக்கு சொந்தமானது என்கிற பெயர்ப் பலகையை சாஸ்த்ரா பல்கலைகழகத்தினர் அகற்றிவிட்டதாக, குற்றச்சாட்டு.

HIGHLIGHTS

தமிழக அரசின் பெயர்ப் பலகையை அகற்றிய  சாஸ்த்ரா பல்கலைகழகத்தினர்
X

கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மக்கள் நலப்பேரவையினர்.

தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகம், தமிழக அரசின் திறந்தவெளி சிறைச்சாலைக்கு சொந்தமான, 31 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, 28 கட்டிடங்களை கட்டிய வழக்கில் உச்சநீதிமன்றம், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க உத்தரவிட்டும், சாஸ்த்ரா பல்கலை கழக நிர்வாகம் இதுவரை நிலத்தை ஒப்படைக்கவில்லை. இந்நிலையில், திருமலை சமுத்திரம் பகுதியில் இந்த இடம் தமிழக அரசின் சிறைத் துறைக்கு சொந்தமானது என்கிற பெயர்ப் பலகையை சாஸ்த்ரா பல்கலைகழகத்தினர் அகற்றிவிட்டதாக, மக்கள் நலப்பேரவையினர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் புகார் கொடுத்தனர். 31 ஏக்கர் நிலத்தையும் தமிழக அரசு மீட்டு, இந்த இடம் தமிழக அரசின் சிறைத்துறைக்கு சொந்தமானது என்று அடையாளப்படுத்திடவும் வலியுறுத்தினர்.

Updated On: 9 May 2022 11:30 AM GMT

Related News