/* */

தேர்வு கட்டணம் உயர்வு: வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்

தேர்வு கட்டணம் உயர்வை கண்டித்து மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தேர்வு கட்டணம் உயர்வு: வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம்
X

தேர்வு கட்டணம் உயர்வை கண்டித்து போரட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

பாரதிதாசன் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை மூன்று மடங்கு உயர்த்தி உள்ளதை கண்டித்து, தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏழை எளிய மாணவர்கள் படிக்க கூடிய பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை உயர்த்தி உள்ளதால் மாணவர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது பயண அட்டை, உதவித்தொகை போன்ற எந்த அடிப்படை உரிமையும் இல்லாமல் மாணவர்கள் கடினமான சூழ்நிலையில் படித்து வரும் வேளையில், கட்டண உயர்வு என்பது மேலும் அவர்களுக்கு சுமையை ஏற்படுத்தும்.

எனது உயர்த்தப்பட்ட கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டணத்தை திரும்பப் பெறவில்லை என்றால் வருகிற 13-ஆம் தேதி பாரதிதாசன் பல்கலைகழகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 7 April 2022 6:57 AM GMT

Related News