/* */

தென்காசியில் கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

தென்காசியில் கூட்டுறவு துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசியில் கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்
X

தென்காசியில் கூட்டுறவு துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் செல்லையா முன்னிலை வைத்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனிடையே மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறும்போது பதிவறை எழுத்தர் முதல் இளநிலை ஆய்வாளர் வரை பதவி உயர்வு பட்டியலைப் பெற்று உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். வாரந்தோறும் காணொலிக்காட்சி மூலம் ஆய்வு கூட்டம் நடத்துவதை தவிர்த்து மாதம் முறை நடத்த வேண்டும். சார் பதிவாளர் கலந்து கொள்வதற்கு விலக்களிக்க வேண்டும். தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் திரளாக கூட்டுறவுத் துறை ஊழியர்கள் பங்கேற்க வேண்டும்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு கூட்டுறவுத்துறை சார்பான அலுவலகங்கள் அமைக்கவும் புதிய பணியிடங்களை விரைவில் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Updated On: 28 Aug 2022 3:24 AM GMT

Related News