Begin typing your search above and press return to search.
வாலாஜா மகளிர் கல்லூரியில் சர்வதேச யோகாதினம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
வாலாஜா அறிஞ்ர் அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இன்று நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார்
HIGHLIGHTS
நம்நாட்டின் பாரம்பரியமாக விளங்கி வரும் தேகம் மற்றும் மனம் சார்ந்த உள ரீதியான ஆரோக்கியத்தைப் பேணும் விதமாக நமது முன்னோர்கள் உலகமே வியக்கும் யோகக் கலையை இவ்வுலகுக்குத் தந்தனர். ஆனால் அவைகளை நாம் தற்போது மறந்தும் தவிர்த்தும் வருகின்றோம்.
இந்நிலையில் தற்போது உலக நாடுகள் யோகாசனங்களை நினைவுபடுத்தும் விதமாக சர்வதேச யோகாசன தினமாக இன்று கடைப்பிடித்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் நடந்த சிறப்பு யோகா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் இயற்கை மற்றும் யோகா மருத்துவர் சசிரேகா, கலந்து கொண்ட மகளிர்களுக்கு யோகா பயிற்சியை அளித்தார்..