/* */

'நாகை- 30' விழாவையொட்டி நடைபயணம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

‘நாகை -30’ விழாவையொட்டி தஞ்சை விரையிலான தனி நபரின் நபையணத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

நாகை- 30 விழாவையொட்டி நடைபயணம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்
X

நாகை மாவட்டம் தொடங்கப்பட்டு முப்பதாண்டு ஆவதையொட்டி தனிநபரின் நடைபயணத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாகை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிகழ்வை மாவட்ட நிர்வாகம் கடந்த 18 ஆம் தேதி முதல் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் நாகை எடுத்துக்காரத்தெருவை சேர்ந்த ராமசாமி என்பவர், மாவட்டத்தின் வளர்ச்சிக்காக நாகை முதல் தஞ்சாவூர் வரை இன்று காலை நடைப்பயணத்தை தொடங்கினார்.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய விழிப்புணர்வு நடைபயணத்தை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த தஞ்சையில் இருந்து நாகை மாவட்டம் பிரிக்கப்பட்டதால் தஞ்சாவூர் வரை நடைபயணம் மேற்கொள்வதாக கூறிய ராமசாமி, முதலிடம் நோக்கி நாகை மாவட்டம் முன்னேற விழிப்புணர்வு நடைபயணத்தை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

Updated On: 22 Oct 2021 9:47 AM GMT

Related News