/* */

கடனை கட்ட முடியாததால் பஞ்சாயத்து உறுப்பினர் தற்கொலை

கடனை கட்ட முடியாததால் பஞ்சாயத்து உறுப்பினர் தற்கொலை
X

அஞ்சுகிராமத்தில் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை கட்ட முடியாததால் பஞ்சாயத்து உறுப்பினர் தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே வட்டக்கோட்டை புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர் சிவராஜன் (24).இவர் மகாராஜபுரம் பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து வருகிறார். சிவராஜன் நிதி நிறுவனம் மூலம் 2 டெம்போக்கள் வாங்கி தொழில் செய்து வந்துள்ளார். ஆனால் எதிர்பார்த்த அளவு டெம்போ மூலம் வருமானம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நிதி நிறுவனத்திற்கு கடன் தொகையை கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதன் காரணமாக கடந்த சில தினங்களாக மனமுடைந்த நிலையில் அவர் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்த புகாரின் அடிப்படையில் அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 13 April 2021 11:00 AM GMT

Related News