/* */

குமரியில் தொடரும் கஞ்சா வேட்டை - 6 பேர் அதிரடி கைது.

குமரியில் தொடரும் கஞ்சா வேட்டையில் 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

குமரியில் தொடரும் கஞ்சா வேட்டை - 6 பேர் அதிரடி கைது.
X

கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா விற்பனை தொடர்பான மோதலில் இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர், மேலும் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் போதை பொருட்களுக்கு எதிராகவும், குறிப்பாக கஞ்சாவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டு உள்ளார்.

இதனை தொடந்து அனைத்து காவல் நிலைய எல்லை பகுதிகளும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தனிப்படை போலீசாரும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கொட்டாரம் பகுதியை சேர்ந்த ஜவஹர்(30), பூட்டேற்றி பகுதியை சேர்ந்த அருள்தாஸ்(59), கம்பளம் பகுதியை சேர்ந்த ரெஜினி(35), வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்(20) மற்றும் இடலாக்குடி பகுதியை சேர்ந்த பாலாஜி(24), அருகுவிளை பகுதியை சேர்ந்த ராஜன்(57) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் ஒவ்வொருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்கள் வைத்திருந்த 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று 6 பேர் கைது என தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை கும்பல் தேடுதல் வேட்டை நடைபெறும் நிலையில் குமரிமாவட்ட போலீசாரின் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

Updated On: 28 Jun 2021 3:31 PM GMT

Related News